தமிழகத்தில் மேலும் 5,589 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று சுமார் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 589 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் இன்று சுமார் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 589 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 5 ஆயிரத்து 554 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , 70 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. சுமார் 46 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் புதிதாக 1,283 பேருக்கு கொரோனா 

சென்னையில் இன்று ஆயிரத்து 283 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 306 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, சென்னையில் இன்று 921 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , 13 உயிரிழப்புகள் நிகழ்ந்து உள்ளது. சுமார் 11 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்