பெரியார் சிலை அவமதிப்பு : "அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்" - வைகோ கண்டனம்

திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ "அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.
பெரியார் சிலை அவமதிப்பு : அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும் - வைகோ கண்டனம்
x
திருச்சி அருகே, பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ "அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், கருத்துக்கு கருத்து, விவாதத்துக்கு விவாதம் என்பதில் நம்பிக்கையில்லாத இந்த சமூக விரோதிகளை இனம் கண்டு காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், நாட்டுக்கு உழைத்திட்ட தலைவர்களின் சிலைகளை அவமதிப்பவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்