பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி - சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
x
தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களாக சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில்,   அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்சி அறிவுறுத்தியிருந்தது. முசிறி சட்டமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்