மண்ணுலகில் இருந்து விடைபெற்றார் பாட்டுத் தலைவன் - எஸ்.பி.பி.க்கு இசையால் அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்

காற்றில் கரைந்த பாடும் வானம்பாடிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இசைக்கலைஞர்கள் இசையால் இறுதி அஞ்சலி செலுத்தினர்...
மண்ணுலகில் இருந்து விடைபெற்றார் பாட்டுத் தலைவன் - எஸ்.பி.பி.க்கு இசையால் அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்
x
இசையால் மக்களை மகிழ்வித்த எஸ்.பி.பி. காற்றில் கரைந்த செய்தியை கேட்டதில் இருந்து இசை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்... ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய எஸ்.பி.பி. காலத்தால் அழியாத அளவுக்கு மக்கள் மனங்களில் நிலைத்துவிட்டார். ஆனாலும் அவரின் மறைவு செய்தியை கேட்டு இசைக்கலைஞர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்

கோவையில் பாடகர்கள் இசை அஞ்சலி 

கோவையில் இசைக்கலைஞர்களின் சார்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாடல்கள் பாடி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மெல்லிசை கலைஞர்கள் சார்பாக அஞ்சலி 

திருச்சியில் மேடை மெல்லிசை கலைஞர்கள் சார்பில் மறைந்த எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் அஞ்சலி 

இதேபோல் நெல்லையில், தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் சார்பில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. எஸ்.பி.பி. பாடிய பாடல்களை, இசைத்து கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். 


பறை அடித்து அஞ்சலி செலுத்திய திருநங்கைகள் 

இதேபோல் தூத்துக்குடியில் திருநங்கைகள் பறை அடித்து எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தினர். 



Next Story

மேலும் செய்திகள்