தமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று சுமார் 92 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 647 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
x
தமிழகத்தில் இன்று சுமார் 92 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 647 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 17 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 5 ஆயிரத்து 612 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , 85 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. சுமார் 46 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றூ வருகின்றனர்.

சென்னையில் மேலும் 1,187 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 460 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் இன்று 867 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , 23 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. 10 ஆயிரத்து 311 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன..

Next Story

மேலும் செய்திகள்