சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
x
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான 2 வழக்குகளில், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் 9 பேர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு உதவி ஆய்வாளர் விசாரணை காலத்தில் இறந்து விட்டதாகவும் மற்றவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்