நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பட்டப்பகலில் இரு பெண்கள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
மறுகால்குறிச்சி பகுதியில் 2019-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் நம்பிராஜன் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய மனைவி வான்மதியின் உறவினர்களால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கு பழிதீர்க்கும் விதமாக நம்பிராஜன் தரப்பு, நாங்குநேரியில் ஓட்டல் ஒன்றில் வான்மதியின் உறவினர் ஆறுமுகம் மற்றும் சுரேஷை வெட்டிக்கொன்றது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் இன்று நம்பிராஜனின் தாயார் சண்முகதாய் மற்றும் சகோதரி சாந்தி இருவரும் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட முகக்கவசம் அணிந்திருந்த 12 பேர் கொண்ட கும்பல்,  ஊர் முழுவதும் பெட்ரோல் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்துவந்த நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார். கிராமம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாங்குநேரி சுங்கசாவடி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலை கும்பலை போலீஸ் தேடிவருகிறது. இச்சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்