நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு: "விசாரணையில் இருந்து விலகி கொள்கிறோம்" - நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முடிவு

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் இருந்து விலகி கொள்வதாக வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு தெரிவித்துள்ளது.
x
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கின் மறு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 
மறு தேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா என்பதை ஏற்க இரு தரப்பினரும் மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு,  வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்