விஷாலின் "சக்ரா" - உயர்நீதிமன்றம் அதிரடி

விஷாலின் "சக்ரா" திரைப்படத்தை ஓ.டி.டி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை வருகிற 30ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
விஷாலின் "சக்ரா" திரைப்படத்தை ஓ.டி.டி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை வருகிற 30ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களிடம் கூறிய கதையை கொண்டு "சக்ரா" படம் எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் புகார் அளித்திருந்தது. இதுதொடர்பான வழக்கில், தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினரும் வரும் 30ம் தேதிக்குள் பேசித் தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்