அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு - முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு தமது எதிர்ப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு 
தமது எதிர்ப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் படித்த பள்ளி மூடப்பட்டதை அறிந்து வருத்தமடைந்தேன் எனக் கூறியுள்ள அவர், தமிழ் மொழி சிறுபான்மையினரின் கல்வி உரிமையை குஜராத் அரசு பாதுகாக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.  தமிழ் மொழி பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கான செலவை தமிழக அரசே ஏற்க தயார் எனவும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்