பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் - அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 85ஆவது பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
x
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் நடைபெற்ற இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, மணிமண்டபத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், இன்பதுரை மற்றும் அதிமுக நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை அரசு விழா என்ற பெருமிதத்தோடு, கொண்டாடும் வகையில், அதிமுக அரசு வழிவகை செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்