தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், காரைக்கால் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம்
x
வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், காரைக்கால் மற்றும் உள்  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, சேலம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு,  நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்