ஆசிரியர் பயிற்சி மாணவிகள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் - தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு
ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடி முறையில் 21 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன,.
ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடி முறையில் 21 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன,. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆன்-லைன் வழியில் தேர்வை நடத்த கோரி சென்னை கடற்கரை சாலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்றும் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வை புறக்கணித்து தேர்வு மைய வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . தகவல் அறிந்து அங்குசென்ற போலீசார் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தேர்வு எழுதுவதற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து 45 நிமிடம் காலதாமதமாக மாணவிகள் தேர்வு எழுத உள்ளே சென்றனர்.
Next Story