பொறியியல் ஆன்-லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் துவக்கம்
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்-லைன் வழியாக தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்-லைன் வழியாக தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே ஆகவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்-லைன் வழியில் இன்று காலை 10 மணிக்கு துவங்கின. ஒரு மணி நேரம் தேர்வு நடைபெறும் வகையில் 40 கேள்வி கேட்கப்படுகின்றன. இதில் 30 கேள்விகளுக்கு மாணவர்கள் விடை அளித்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 4 சுற்றுகளாக தேர்வு நடைபெறுகிறது. இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் மாணவர்களுக்கான இந்த இறுதி செமஸ்டர் தேர்வு, இந்த மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.
Next Story