பாஜக தலைவர் முருகன் வீட்டின் முன் பெண் போராட்டம் - பாஜக கொடியை தூக்கிலிட போவதாக கூறி கோஷம்

சென்னையில் பாஜக தலைவர் முருகனின் வீட்டின் முன் பெண் ஒருவர் தனியாளாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜக தலைவர் முருகன் வீட்டின் முன் பெண் போராட்டம் - பாஜக கொடியை தூக்கிலிட போவதாக கூறி கோஷம்
x
சென்னையில் பாஜக தலைவர் முருகனின் வீட்டின் முன் பெண் ஒருவர் தனியாளாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்பேட்டில் உள்ள முருகனின் வீட்டிற்கு முன் வந்த நர்மதா என்ற அந்த பெண், கையில் பாஜக கொடியை வைத்துக் கொண்டு நின்றார். பின்னர் அந்த கொடியை தூக்கில் போடுவது போல அவர் முயற்சிக்கவே, அங்கிருந்த போலீசார் உடனே அவரை தடுத்து நிறுத்தினர். பாஜக தலைவர் முருகன் மீது சில விமர்சனங்களை முன்வைத்து இதுபோல் செய்ததாக நர்மதா கூறிய நிலையில் போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்