விமான நிலையத்தில் மீண்டும் இ-பாஸ் மையம் திறப்பு - பயணிகள் நிம்மதி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் கோரிக்கையை ஏற்று இ-பாஸ் கவுண்டா்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் மீண்டும் இ-பாஸ் மையம் திறப்பு - பயணிகள் நிம்மதி
x
சென்னை மீனம்பாக்கம்  விமான நிலையத்தில் பயணிகள் கோரிக்கையை ஏற்று  இ-பாஸ் கவுண்டா்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.  நேற்று முன்தினம் சென்னை விமான நிலைய உள்நாட்டு முணையம் வருகை பகுதியில் இயங்கி வந்த இ-பாஸ் கவுண்டா்களை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டது. விமான பயணிகள் ஆன்-லைனில் இ-பாஸ் விண்ணப்பித்து பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆன்-லைனில் விமான பயணிகளுக்கு உடனே இ-பாஸ் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதையடுத்து, பயணிகள் கோரிக்கையை ஏற்று தற்போது மீண்டும் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்