"நான் உயிருடன் இருக்கும் வரை காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது" - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆவேசம்

மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்கியது முதல் திருச்சி காந்தி மார்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
நான் உயிருடன் இருக்கும் வரை காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆவேசம்
x
மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்கியது முதல் திருச்சி காந்தி மார்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் காந்தி மார்கெட்டை உடனடியாக திறக்க வேண்டும் என காந்தி மார்கெட் வியாபாரிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காந்தி மார்கெட்டில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது,  உயிருடன் இருக்கும் வரை, அ.தி.மு.க வில் இருக்கும் வரை, அமைச்சராக இருக்கும் வரை காந்தி மார்கெட் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படாது என கூறினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்