நீட் எதிர்ப்பு... 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேர் கைது
நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் 7வது நாளாக காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்தவர்களை கைது செய்த போலீசார், மதுரவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர். கைதானவர்களில் 3 பெண்கள் உட்பட 7 பேர், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story