கொலை செய்யப்பட்ட வியாபாரி செல்வனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த வியாபாரி செல்வன் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த வியாபாரி செல்வன் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமண வேல் ஆகியோரை கைது செய்யும் வரை உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பிணவறையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே செல்வன் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
Next Story