மனைவி நடத்தையில் சந்தேகம் - கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வாணிபுத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனைவி நடத்தையில் சந்தேகம் - கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன்
x
ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள வாணிப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். கண் பார்வை பிரச்சனையால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால், அவரது மனைவி கவிதா வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

நேற்று முன்தினமும்  அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், படுக்கையறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கவிதா இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன் கார்த்திகேயன் தாய் மாமன் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே, கவிதாவின் கணவர் மோகன சுந்தரம், கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்துள்ளார். அவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தபோது,  அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது.

கவிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட மோகன சுந்தரம், சம்பவத்தன்று தேநீரில் கவிதாவுக்கு விஷத்தை கலந்து கொடுத்ததாகவும், விஷம் குடித்தும் கவிதாவின் உயிர் பிரியாததால், கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததாகவும் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார், மோகன சுந்தரம். மனைவியின் மீது சந்தேகப்பட்டு கண் பார்வையில்லா கணவன் கொலை செய்தது, அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்