ரூ.10 லட்சம் கேட்டு மனைவிக்கு துன்புறுத்தல் - மனைவி அளித்த புகாரின் பேரில் கணவனை கைது செய்த போலீசார்

வரதட்சணை கொடுக்க மறுத்த மனைவியின் ஆபாசப் படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்...
ரூ.10 லட்சம் கேட்டு மனைவிக்கு துன்புறுத்தல் - மனைவி அளித்த புகாரின் பேரில் கணவனை கைது செய்த போலீசார்
x
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் விஜயபாரதி. தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அயனாவரத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தவர். இவர் தனியார் சமையல் எரிவாயு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகவே, இரண்டு முறை அந்த பெண் கருவுற்றுள்ளார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் வற்புறுத்தவே, கடந்த 6 மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணம் செய்து கொண்ட இருவரும் அயனாவரத்தில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். திருமணத்திற்கு முன்பாகவே அந்த பெண்ணை பற்றிய தகவல்கள் எல்லாம் தெரிந்து வைத்திருந்த விஜயபாரதி, அவரிடம் ஆரம்பத்திலேயே பணம் கேட்டு நச்சரித்து வந்துள்ளார். 10 லட்ச ரூபாய் வரதட்சணை வேண்டும் என கூறி தினமும் சண்டை நடந்துள்ளது. காதலில் இருந்த போது பார்த்ததற்கும் திருமணத்திற்கு பிறகு விஜயபாரதியின் நடவடிக்கைக்கும் மாற்றம் தெரியவே, அதிர்ந்து போனார் அந்த பெண்... ஒரு கட்டத்தில் கணவர் பணம் கேட்டு அடித்து உதைக்கவே, அதையும் பொறுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பணம் தராவிட்டால் உன்னுடைய ஆபாச படங்களை எல்லாம் பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவேன் என கணவர் மிரட்ட ஆரம்பிக்கவே பயந்து போனார் அவர்...தனக்கு நடந்ததை எல்லாம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த பெண்... மனைவி தன் மீது அளித்த புகாரால் ஆத்திரமடைந்த விஜயபாரதி, தாங்கள் நெருக்கமாக இருக்கும் போது எடுத்து வைத்திருந்த மனைவியின் ஆபாச படங்களை அவரின் பேஸ்புக் கணக்கில் இருந்தே பதிவேற்றியிருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ந்து போன மனைவி உடனே தனக்கு நேர்ந்த துயரங்களை எல்லாம் புகாராக அளிக்கவே, கடைசியில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் விஜயபாரதி. செல்போன்களிடம் இருந்து மட்டுமல்ல... விஜயபாரதியை போன்ற மோசடி பேர்வழிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே இந்த சம்பவம் நமக்கு உணர்த்தியிருக்கும் பாடம்... 

Next Story

மேலும் செய்திகள்