நெய்வேலியில் கருணாநிதி சிலை திறப்பு - காணொலி மூலம் திறந்து வைத்த ஸ்டாலின்

நெய்வேலியில் கருணாநிதியின் சிலையை, திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெய்வேலியில் கருணாநிதி சிலை திறப்பு - காணொலி மூலம் திறந்து வைத்த ஸ்டாலின்
x
நெய்வேலியில் கருணாநிதியின் சிலையை, திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் பின்னர் பேசிய ஸ்டாலின், விழாவில் நேரில் கலந்து கொள்ள இயலாதது வருத்தமளிப்பதாகவும், சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிப்பதாக கூறிய ஸ்டாலின், நீட் விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலைக்கு அதிமுக அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார். மக்கள் அதிமுக ஆட்சியினை தூக்கி எறிய தயாராகி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்