தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 82 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 652 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
x
தமிழகத்தில் இன்று 82 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 652 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 5 ஆயிரத்து 768 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , 57 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. சுமார் 46 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மேலும் 983 பேருக்கு கொரோனா 

சென்னையில் இன்று 983 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 669 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று ஆயிரத்து 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 14 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 560 ஆக உயர்ந்து உள்ளது. 9 ஆயிரத்து 833 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்