நீட் விவகாரத்தில் சூர்யாவின் கருத்து ஏற்புடையது - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

நடிகர் சூர்யாவுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வலியுறுத்தி உள்ளார்.
நீட் விவகாரத்தில் சூர்யாவின் கருத்து ஏற்புடையது - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
x
நடிகர் சூர்யாவுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வலியுறுத்தி உள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக காவிரி பிரச்சினைக்காக பேரணியின் போது உயிர் நீத்த மன்னார்குடி இளைஞர் விக்னேஸ்வரன் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நீட் தேர்வை எழுத மாட்டோம் என போராடி, மாணவர்கள் வெளியேற முடியாது என்றும், வேறு வழியின்றி எழுதுவதாகவும் கூறினார். சூர்யாவை ஆதரித்த நீதிபதிகளுக்கு சீமான் நன்றி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்