தமிழக சட்டப்பேரவை கூடுகிறது - பாதுகாப்பு வளையத்திற்குள் கலைவாணர் அரங்கம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில்இன்று தொடங்குகிறது.
தமிழக சட்டப்பேரவை கூடுகிறது - பாதுகாப்பு வளையத்திற்குள் கலைவாணர்  அரங்கம்
x
புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கொரோனா காலகட்டத்தால், கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.
இதனால், கலைவாணர் அரங்கம் முழுவதும் காவல்துறையும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. சட்டப்பேரவை வளாகத்தில் 150 அவைக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல வளாகத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் கிருமிநாசினிகள் கொண்டு தொடர்ச்சியாக சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. அரங்கில்  தனி நபர் இடைவெளியுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்வதற்காக மூன்றாவது தளத்தில்  பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது தளத்தில் முதலமைச்சர் மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கான அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2-ம் தளத்தில் துணை சபாநாயகர், துணை முதலமைச்சர் அறைகளும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறைகள் ஓதுக்கப்படுள்ளது.முதல் தளத்தில் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.தரைதளத்தில் எதிர்க்கட்சித் தலைவர்,காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்