நீட் அச்சம் - மாணவி தற்கொலை முயற்சி

ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி, அச்சத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
நீட் அச்சம் - மாணவி தற்கொலை முயற்சி
x
ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி, அச்சத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சோளிங்கர் அடுத்த பாரதி நகர் பகுதியை  சௌமியா, தேர்வு அச்சம் காரணமாக இரவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். காலையில் நீண்ட நேரமாகியும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்காததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை உடனடியாக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்