ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நாளை திறப்பு - 7 ஆயிரம் மலர் தொட்டிகளில் அலங்காரம்
கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த ஊட்டி தாவரவியல் பூங்காவைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தாவரவியல் பூங்கா நாளை திறக்கப்படுகிறது.
கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த ஊட்டி தாவரவியல் பூங்காவைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தாவரவியல் பூங்கா நாளை திறக்கப்படுகிறது. சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு பூங்கா திறக்கப்படுவதால், சுற்றுலா பயணிகளைக் கவர 7 ஆயிரம் மலர் தொட்டிகளைக் கொண்டு பூங்கா நிர்வாகம் பல அலங்கார வேலைப்பாடுகளை செய்துள்ளது. மேலும் பூங்காவில் கண்களைக் கவரும் வகையில், பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
Next Story