சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்க கோரிய வழக்கு - நேரில் ஆஜராக நெல்லை ஆட்சியர், எஸ்.பி.க்கு உத்தரவு

மணல் கடத்தலை தடுக்கக் கோரிய வழக்கில் நெல்லை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. காணொலி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
x
நெல்லை மாவட்டம் தெற்கு கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சிவசங்கரன் தாக்கல் செய்த மனுவில்,  கேரளாவைச் சேர்ந்த மேனுவல் ஜார்ஜ் என்பவர் தங்கள் பகுதியில் எம் சாண்ட் குவாரி அமைக்க அனுமதி பெற்றுள்ளதாகவும்.   தினமும் இரவு நேரங்களில் 200 முதல் 300 லாரிகள் வரை சட்டவிரோதமாக  மண்ணை அள்ளி கடத்தி விற்பனை செய்து வரும் நிலையில், நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் சத்யநாராயணன்,  ராஜமாணிக்கம் அமர்வு, மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகள் போட்டாலும் அதனை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை என்று தெரிவித்தனர்.  மணல் கடத்தல் காவல்துறையினருக்கு தெரியாமல் நடப்பதில்லை என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.  மேலும், ஆட்சியர், மற்றும் எஸ்.பி. ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்,  வழக்கு விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்