கோவை கட்டிட விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் - இடிபாடுகளில் இருந்து மீட்கும் பணிகள் தீவிரம்

கோவை கே.சி.தோட்டம் பகுதியில் உள்ள பழைய மாடி வீடு ஒன்று, மழையால் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
கோவை கட்டிட விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் - இடிபாடுகளில் இருந்து மீட்கும் பணிகள் தீவிரம்
x
கோவை கே.சி.தோட்டம் பகுதியில் உள்ள பழைய மாடி வீடு ஒன்று,  மழையால் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்தில் இருந்த 8 பேரில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளார். அவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வீடு இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் கொமாராபாளையத்தில், வீடி இடிந்து விழுந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த சுவேதா மற்றும் கோபால் சாமி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இதில் காயமடைந்த 6 பேர் விரைவில் பூரண நலம் பெற வேண்டுவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்