காதல் விவகாரத்தில் சகோதரியை ஏமாற்றியவரின் தம்பி கொலை - பழி தீர்த்த பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது

தங்கையை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியவரின் தம்பியை, சகோதரர் கொலை செய்த பழி தீர்த்த சம்பவம், கடலூரில் அரங்கேறியுள்ளது.
காதல் விவகாரத்தில் சகோதரியை ஏமாற்றியவரின் தம்பி கொலை - பழி தீர்த்த பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது
x
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை சேர்ந்த சாந்த குமார், சனிக்கிழமை இரவு, வீட்டில் இருந்து கடை வீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அப்போது, கொலைக்கு காதல் விவகாரம் காரணம் என தெரியவந்தது.



Next Story

மேலும் செய்திகள்