காதல் விவகாரத்தில் சகோதரியை ஏமாற்றியவரின் தம்பி கொலை - பழி தீர்த்த பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது
தங்கையை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியவரின் தம்பியை, சகோதரர் கொலை செய்த பழி தீர்த்த சம்பவம், கடலூரில் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை சேர்ந்த சாந்த குமார், சனிக்கிழமை இரவு, வீட்டில் இருந்து கடை வீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அப்போது, கொலைக்கு காதல் விவகாரம் காரணம் என தெரியவந்தது.
Next Story