தமிழகத்தில் 375 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது - 15 பேருக்கு விருது வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி
15 ஆசிரியர்களுக்கு மாநில அரசின் நல்லாசிரியர் விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
15 ஆசிரியர்களுக்கு மாநில அரசின் நல்லாசிரியர் விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பள்ளிக் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் 375 பேருக்கு மாநில அரசின் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் 15 ஆசிரியர்களுக்கு, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாசிரியர் விருதை வழங்கி கவுரவித்தார். மீதம் உள்ள ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story