"தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை" - கடலூர் மாவட்டத்தில் 240 தனியார் பேருந்துகள் நிறுத்தம்

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை - கடலூர் மாவட்டத்தில் 240 தனியார் பேருந்துகள் நிறுத்தம்
x
தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. 6 மாதத்திற்கான வரியை ரத்து செய்ய வேண்டும், அனைத்து இருக்கைகளிலும் பயணிகளை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்துகள் சங்கம் முன் வைத்த அதே கோரிக்கைகளை, தனியார் பேருந்து உரிமையாளர்களும் வலியுறுத்தி உள்ளனர். இதன்படி, கடலூர் மாவட்டத்தில் மட்டும் 240 தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, புதுச்சேரியில் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படாததால், புதுச்சேரி வழியாக சென்னை வரும் அனைத்து பேருந்துகளும் பண்ருட்டி மற்றும் விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்