சென்னையில் இருந்து ரயில் போக்குவரத்து தொடக்கம் - கோவைக்கு முதல் ரயில் புறப்பட்டுச் சென்றது

இன்று முதல் தமிழகத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்கி உள்ள நிலையில் பயணிகள் அதிக ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.
சென்னையில் இருந்து ரயில் போக்குவரத்து தொடக்கம் - கோவைக்கு முதல் ரயில் புறப்பட்டுச் சென்றது
x
இன்று முதல் தமிழகத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்கி உள்ள நிலையில், பயணிகள் அதிக ஆர்வத்துடன் பயணம் செய்தனர். முதற்கட்டமாக 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. முன்பதிவு செய்த பயணிகள் காலையிலேயே சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திரண்டனர். ரயில் நிலையத்தில், தீவிர பரிசோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை 6.10 மணி அளவில் சென்னை சென்ட்ரலில் இருந்து  கோவைக்கு சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது.

சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்

தமிழகத்தில் இன்று முதல் ரயில் சேவை தொடங்கியுள்ள நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. காலை 8 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ரயில் நிலையத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ரயிலைத் தொடர்ந்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்