"கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா? குறையுமா? என்பது 10 நாளில் தெரியும்" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பது இன்னும் பத்து நாட்களில் தெரியும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா? குறையுமா? என்பது 10 நாளில் தெரியும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
x
கொரோனா நிலவரம் குறித்து பேசிய அவர், தமிழகத்தில் கோவை, ஈரோடு திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.  கொரோனா கட்டுப்பாடுகளும், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்றும், தளர்வுகளால் தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரிக்குமா, குறையுமா என்பது இன்னும் பத்து நாட்களில் தெரிய வரும் என்றார். அரசு அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர், விதிமீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்


Next Story

மேலும் செய்திகள்