நகை பட்டறையில், 14 கிலோ தங்கம் மாயமான விவகாரம் - உரிமையாளர் மகனே திருடியது விசாரணையில் அம்பலம்

சென்னை யானைகவுனியில் உள்ள நகைப்பட்டறை ஒன்றில் 14 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் உரிமையாளர் மகனே நகையை திருடியது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.
நகை பட்டறையில், 14 கிலோ தங்கம் மாயமான விவகாரம் - உரிமையாளர் மகனே திருடியது விசாரணையில் அம்பலம்
x
யானைகவுனி பகுதியில் ராஜ்குமார் மற்றும் சுபாஷ் போத்ரா ஆகிய இருவர் இணைந்து நடத்தி வந்த நகை பட்டறையில்  கடந்த ஆகஸ்ட் மாதம், 14 கிலோ தங்கம் மாயமானது.  பூட்டு உடைக்கப்படாமல் நகை திருடு போனதால் நன்கு பரிச்சயமான ஆட்கள் தான் திருடி உள்ளனர் என போலீசார் முடிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதன்படி  உரிமையாளர்களில் ஒருவரான சுபாஷ் போத் ராவின் மகன் ஹர்ஷ் போத்ரா என்பவர், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து போலீசார், சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்