"இந்தியில் பதில் வழங்கிய மத்திய அரசை கண்டித்து போராட்டம்"- பெ.மணியரசன்
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மத்திய நீர் ஆற்றல் துறைக்கு தகவல் உரிமைச் சட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 8 கேள்விகள் கேட்டிருந்தார்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மத்திய நீர் ஆற்றல் துறைக்கு, தகவல் உரிமைச் சட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 8 கேள்விகள் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து நீர் ஆற்றல் துறையிலிருந்து 2 கடிதங்கள் முழுக்க முழுக்க இந்தியில் வந்து உள்ளதாகவும், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் எழுதி உள்ளதாகவும் மணியரசன் தெரிவித்துள்ளார். உரிய பதில் வராத நிலையில், சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் எனவும் மணியரசன் தெரிவித்துள்ளார்.
Next Story