செப்.8ல் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
x
தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் இ-பாஸ் ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில். மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 7ஆம் தேதி முதல் ரயில் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்க உள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்