கொரோனா சிகிச்சையின் நடுவே பிற அவசர சிகிச்சைகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமித விளக்கம்

கொரோனா பரவல் கால கட்டத்திலும், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு அவசர கால சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்
கொரோனா சிகிச்சையின் நடுவே பிற அவசர சிகிச்சைகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமித விளக்கம்
x
கொரோனா பரவல் கால கட்டத்திலும், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு அவசர கால சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மார்ச் மாதம் முதல் இதுவரை ஒரு லட்சத்து 52 ஆயிரம்  பேருக்கு விபத்து காய சிகிச்சையும், 63 ஆயிரத்து 633 பேருக்கு அறுவை சிகிச்சையும் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். விஷம் அருந்துதல் உள்ளிட்ட சுய தீங்கு பாதிப்பில் சிக்கிய 52 ஆயிரத்து 849 பேருக்கு சிகிச்சை வழங்கியதாக கூறியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், 19 ஆயிரத்து 947 பேருக்கு பாம்பு கடிக்கான சிகிச்சையும், நான்காயிரத்து 494 குழந்தைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை, நான்காயிரத்து 432 பேருக்கு மாரடைப்புக்கான சிகிச்சை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   ஏழாயிரத்து 775 பேருக்கு பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்த்துள்ளதாக கூறியுள்ள அவர், இதுவரை மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு அவசரகால சிகிச்சை அளித்து பாராட்டை பெற்றுவருவதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்