7 ஆம் தேதி முதல் பொதுப்போக்குவரத்து சேவை - மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

மாவட்டங்களுக்கிடையே பொதுப்போக்குவரத்து தொடங்கவுள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.
x
தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே, பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கவுள்ளது. சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். பொதுப்பேருந்து மற்றும் ரயில் சேவைகளை மக்கள் பயன்படுத்தும்போது நோய் தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்