வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை - 9 வயது மகளிடம் அத்துமீறிய இன்ஜினியர் போக்சோவில் கைது

வளர்ப்பு மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பொறியாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை - 9 வயது மகளிடம் அத்துமீறிய இன்ஜினியர் போக்சோவில் கைது
x
தஞ்சையை சேர்ந்த 30 வயதான பெண்ணுக்கு 9 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். கணவரை விவாகரத்து செய்த அந்த பெண் மதுரையை சேர்ந்த பொறியாளர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று 9 வயதான வளர்ப்பு மகள் வீட்டில் தனியாக இருந்தபோது அவரை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதனை சிறுமி தன் தாயிடம் கூறவே அவர் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் வளர்ப்பு தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். வளர்ப்பு மகளிடம் தந்தையே அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்