10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
x
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுக்கு பதில், திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்க வேண்டும் என எட்டு மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைவரும் வெற்றி என அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டதாகவும், எனவே நீதிமன்றம் தலையிட்டால், மாணவர்களின் மேல்படிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கொரோனா காலத்தில் மாணவர்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்