எஸ்.பி.பி. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - 90% மயக்க நிலையில் இருந்து மீண்டார் எஸ்.பி.பி.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
x
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், 90% மயக்க நிலையில் இருந்து எஸ்பிபி மீண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் எஸ்.பி.பி. பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புவதாகவும், அந்த வீடியோவில் சரண் தெரிவித்துள்ளார். இதனிடையே, எஸ்பிபி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள தகவலறிந்து, அவரது ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்