விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் - தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், முத்தியால்பேட்டை கிராமத்தில், கடந்த 20ஆம் தேதி பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது லட்சுமணன், சுனில் ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story

