"பொது முடக்கத்தை நீக்குங்கள்" - தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
தமிழகத்தில் பொது முடக்கத்தை நீக்கவும், போக்குவரத்து தடையை விலக்கவும் தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பொது முடக்கத்தை நீக்கவும், போக்குவரத்து தடையை விலக்கவும் தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி, கர்நாடகா போன்று தடைகளை விலக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார். கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்தை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story