அநாகரிகமாக நடந்து கொண்ட ஆயுஷ்துறை செயலர் மீது பிரதமர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ஆயுஷ் துறை செயலாளர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்ற 37 தமிழக மருத்துவர்களிடம், இந்தி தெரியவில்லை என்றால் வகுப்பிலிருந்து வெளியேறுங்கள்,என்று, செயலாளர் ராஜேஷ் கொட்டேச்சா என்பவர் ஆணவத்துடனும், இந்தி மொழி வெறியுடனும், மிரட்டல் விடுத்திருப்பதாக அறிக்கையில் கூறியுள்ளார். இதற்கு திமுக சார்பில் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்தியில் உள்ள அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பது தான் எங்களின் திட்டம் என்ற பாஜக. அரசின் எண்ணத்தை இது வெளிப்படுத்துகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இனி இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நேர்ந்து விடாமல் பிரதமர் உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களுக்கு இடையே இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் தான், பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Next Story

