ஏ.டி.எம்.ஐ உடைத்து திருட முயற்சி- இளைஞருக்கு தர்மஅடி

ஓமலூர் அருகே ஏ.டி.எம். பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து, பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
ஏ.டி.எம்.ஐ உடைத்து திருட முயற்சி- இளைஞருக்கு தர்மஅடி
x
ஓமலூர் அருகே ஏ.டி.எம். பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து, பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இதனால் பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது. வெள்ளாளப்பட்டியில் உள்ள இந்தியன் வங்கியின் முன்புறம், ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இரவு காவலாளி இல்லாத ஏடிஎம் மூடப்பட்டு இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஏ.எடி.எம். பூட்டை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை, பொதுமக்கள்  பிடித்து கட்டிப்போட்டு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அதேபகுதியைச் சேர்ந்த 30 வயது கார்மேகம் என்பது தெரியவந்தது. 


Next Story

மேலும் செய்திகள்