தனியார் பள்ளிகளில் இலவச கல்வி - 27ம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க வரும் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க, வரும் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரை மத்திய, மாநில அரசுகள் கல்வி கட்டணத்தை செலுத்துகின்றன. பள்ளிக்கல்வித்துறை இணையத்தளத்தில், வரும் 27ம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம். இதன்படி குழந்தையின் வீட்டிலிருந்து தனியார் பள்ளி 1கிலோ மீட்டர் தொலைவிலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story

