தங்க கட்டிகள் படத்தை வாட்சாப்பில் அனுப்பிய நபர் - வழக்கு பதிவு செய்து போலீசார் ​தீவிர விசாரணை

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சின்னத்திரை துணை நடிகரிடம் தங்க கட்டியின் புகைப்படங்களை அனுப்பி விற்று தரகோரி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டுள்ளார்.
தங்க கட்டிகள் படத்தை வாட்சாப்பில் அனுப்பிய நபர் - வழக்கு பதிவு செய்து போலீசார் ​தீவிர விசாரணை
x
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சுரேஷ் என்பவர், சின்னத்திரை மற்றும் ஒன்றிரண்டு தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். நேற்றிரவு ராகுல் ஷர்மா என்ற நபர், ராஜஸ்தானிலிருந்து பேசுவதாக கூறி, இந்தி மொழியில் பேசியுள்ளார். இணைப்பை சுரேஷ் துண்டிக்க, ஆனால், வாட்சாப்பில், அவரது எண்ணுக்கு தங்க கட்டிகள் புகைப்படத்தை அனுப்பி விற்று கொடுத்து 40 சதவீதம் கமிஷன் எடுத்து கொள்ளுமாறு அந்த நபர் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிர்ச்சியடைந்த சுரேஷ், தண்டையார்பேட்டை காவல்துறையினரிடம், புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து அந்த எண்ணை வைத்து அந்த நபரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்