வருகிற ஆக.- 15 சுதந்திர தின விழா எதிரொலி - பாம்பன் பாலம், ராமேஸ்வரம் கோவிலில் கூடுதல் பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலம், ராமேஸ்வரம் கோவில், கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலும், கடல் பகுதியிலும் மத்திய, மாநில உளவுப்பிரிவு அதிகாரிகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாம்பன் ரயில் பாலத்தில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு தண்டவாளங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. கடல் மற்றும் கடற்கரையில் சந்தேகப்படும் வகையில் அன்னிய படகுகள், அந்நிய நபர்களை பார்த்தால் பொதுமக்கள் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story