"ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர் கொலை" - 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது காவல்துறை

உறவினர் பெண்ணின் கள்ளத் தொடர்பை விட மறுத்து, ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர், கழுத்தை அறுத்துக் கொலை கொலை செய்யப்பட்டார்.
ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர் கொலை - 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது காவல்துறை
x
சென்னையை அடுத்த நங்கநல்லூரைச் சேர்ந்த 27 வயதான பிரபாகர், கடந்த 10-ந் தேதி இரவு செல்போனில் யாரோ அழைப்பதாக கூறி சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் திங்கள்கிழமை காலை பழவந்தாங்கலில் உள்ள காலி மைதானத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிரபாகர்,  சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்த போலீசார், பிரபாகரின் செல்போனுக்கு வந்த அழைப்பை வைத்து விசாரணையை தொடங்கினர். அப்போது, நங்கநல்லூர் ரத்தினபுரத்தை சேர்ந்த ரவுடி ராபின் ராஜா என்பவர், பிரபாகரை செல்போனில் அழைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து விசாரித்தபோது, பிரபாகரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உறவினர் பெண்ணின் கள்ளத் தொடர்பை விட மறுத்து, ரவுடி போல் நடந்து கொண்டதால், கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த ராபின் ராஜா நண்பர்கள் 7 பேரை 15 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்